Monday, August 11, 2008

எங்கே செல்கிறது என் நாடு !

என்னடா இவன் இப்படி ஒரு டைட்டில் குடுத்து இருக்கானேன்னு பார்க்குரீங்களா???

காரணம் இருக்கு!!!!!!!

நான் கண்ட சில விஷயங்களை இங்கே குறிப்பிடுகிறேன்.... நீங்களும் சிந்தியுங்கள்!!!

1. ஒரே ஒரு மஞ்சள் பையுடன் சென்னை வந்தவர்கள் இன்று அரசியல் தலைவர்.. அவருக்கு இருக்கும் சொத்து மதிப்பு பல ஆயிரம் கோடி ரூபாய்......

2. வெறும் எலிமென்ட்டரி ஸ்கூல் டீச்சர் ஆக வேலை பார்த்தவர் , இந்தியா வில் உள்ள மூட நம்பிக்கைகளை பயன் படுத்தி , இன்று பல கோடி ரூபாய்க்கு முதலாளி.....

3. கையெழுத்து கூட போட தெரியாத சாதாரண "கைநாட்டு" கேசு இன்று 4-5 காலேஜுக்கு சேர்மன்.......

4. கஷ்டப்பட்டு இரவு பகல் பார்க்காமல் படித்து முடித்த டிகிரி ஸெர்டிஃபிக்கேட்ஸ் ஐ, வேலை இல்லாத காரணத்தால் அடகு கடையில் இருக்கிறது...

5. ஒரு 300 பேருக்கு வேலை குடுக்க , 4000 ஏக்கர் விவசாய நிலங்களை கையகப்படுத்துதல்...

6. இங்கே சில விவசாயிகள் உண்பதற்க்கே உணவு இல்லை, ஆனால் வெளிநாட்டு "நடிகரை" வரவேர்க்க 10 கோடி தண்டம்........

7. சினிமா நடிகரால் நமக்கு ஒன்றும் வர போவது இல்லை.. ஆனால், எத்தனை போஸ்டர்கள் நம் ரசிகர்கள் மூலமாக.... கட் அவுட்டுக்கு வேஸ்ட் பண்ணும் "பாலை" , ஏழைக்கு கொடுத்தால் புன்னியமாவது வந்து சேரும்...

8. எத்தனை கட்சிகளடா, அதில் தான் எத்தனை கொடிகளடா??? "ஏழைக்கு உடுக்க உடை இல்லை... ஆனால் சிலை திறப்பு விழாவுக்கு வருகிற நம்ம தலைவரை வரவேற்க எத்தனை "பொன்னாடைகள்"???

9. பதவிக்கு ஆபத்து வந்து விடுமோ என பயப்படும் அரசியல்வாதி, சொந்த முடிவு எடுக்க, அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டுகிறார்...

10. அஹிம்சை வழியில் போராடும் மக்களுக்கு "லத்தி" அடி, ரவுடிஸம் பண்ணும் அரசியல்வாதிகளுக்கு சல்யுட்.... என்ன செய்கிறது சுப்ரீம் கோர்ட்???


பதில் சொல்லுங்கள் நண்பர்களே..... ( உள்ளத்தில் இருந்து)........

2 comments:

boobu said...

nee pesama oru katchi start pannu

Vithya said...

brain damage ayiducha? :O

jokes apart,,

sindhika vaendiya vishayam!

unaku naatu maela ivlo akkaraiya?
what difference are u going to make to India?
say it now!